ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.

English Meaning:
He Spreads Like Flower`s Fragrance

The Lord is the Light that moves in directions eight;
He is the source of all Sound;
He is the eternal;
As on one land,
The nine universes He pervaded;
Like the flower`s fragrance,
He spreads everywhere.
Tamil Meaning:
மேற்கூறிய தலைவன், மேற்கூறிய கலைகளும் கீழதாகிய நிவிர்த்தி கலையில் இருக்கும் பிரம தேவன் செய்கின்ற படைத்தலையும் நீக்கி, அவனுக்குமேல் இருபத்து மூன்று தத்துவங் -கட்குத் தலைவன் ஆதலின், `நெடியோன்` எனப்படுகின்ற மாயோன் செய்கின்ற சின்னாள் நிலைப்பதாகிய காத்தலையும் நீக்கி, அவனுக்கு மேல் உள்ள உருத்திரன் அறியாமையிற்படுத்துத் துன்பக்கிடையில் கிடத்துகின்ற அழித்தலையும் நீக்கி அடியேனை உய்ய வைத்து, என்மீது அருள்மிக உடையன் ஆயினான்.
Special Remark:
`அவனது பெருமை அத்தகையது` என்பது குறிப் பெச்சம். கால் - அடிநிலை. இதனை, `கடைக்கால்` என்பர். பாசம், பிணிப்பது. ``பிரமன் செய் குறுமை நேசம்`` என மொழி மாற்றுக் கொள்க. நேசம் - கருணை. கருணையால் செய்யப்படுவதநை, `கருணை` என உபசரித்துக் கூறினார். முத்தொழில்களுள் காத்தல் தொழிலையே கருணைத் தொழிலாக மக்கள் கருதுதல் பற்றி அதனை, ``குறுமை நேசம்`` - என நகையாடிக் கூறினார். செடி - கீழ்மை. அஃது இங்கு அறியாமையைக் குறித்தது. ஊழியை முடிப்பவன் உருத்திரன். அது முடிந்தபொழுது கருவிகளுள் யாதும் இன்மையால், உயிர்கள் ஆணவத்துள் அழுந்தி, யாதும் அறியாது கிடக்கும் சிலவகைக் கேவலங்களுள் இது `சகல கேவலம்` எனப்படும். `தவம்` என்பது, `தாபம் - வெப்பம்` என்பதினின்றே வருதலால் இக்கேவல நிலையையும் `தவம்` என்கின்றவர் `செடியார் தவம்` என வேறு படுத்திக் கூறினார். ``சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் - சுடச்சுட நோற்கிற் பவர்க்கு``1 என்னும் திருக்குறளும் `தவம்` என்னும் சொல்லியல்பை விளக்குவதாய் உள்ளது. இவ்வாற்றால் அழித்தலைக் குறிக்கவே, அதனைச் செய்வோனை எடுத்தோதல் வேண்டா வாயிற்று. இங்கு, செய்தல், சேர்த்தலாம். முத்தியாவது விடுதலை யாகலின், `அவ்விடுதலை யாது` என்பார்க்கு, `படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் காரணக் கடவுளர்களது செயல்களினின்றும் விடுபடும் விடுதலை` என்பதே விடையாகக் கூறப்படுகின்றது. அதனையே நாயனார் இம்மந்திரத்தில் இவ்வாற்றாற் கூறினார்.
இதனால், முன் மந்திரத்தில் ``நாடுமின்`` எனக் கூறிய அத் தலைவன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள அருள்நிலை புகழ்ந்து கூறப்பட்டது.