ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

English Meaning:
Fruit of Jnana

The shoot of tiny banyan seed,
As a mighty tree within foul body grew,
And rich ripe fruit it bore;
They who ate, forever remained to be;
The fools who did not,
Remained in body,
Tossed about from birth to birth.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமான் ஏனைத் தேவரினும் பார்க்க மிகப் பெரியோனாயினும், உயிர்களின் சிற்றுடம்பினுள் அவற்றினும் சிறியவாய இருதயத்துட் சிறியனாய்க் கலந்து, அங்குச் சுடர்வடிவாய் விளங்குகின்றான். ஆகவே, அப்பெரியோன் ஏனைத் தேவரால் அளவிட்டறியப்படும் அளவினன் அல்லன். இங்ஙனமாகவே உயிர்கள் செய்யும் தவங்களை அளவிட்டறிபவன் அவனே.
Special Remark:
``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற் றரற்றுகின் றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்ப ரீசனே``1
என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார். `சிறுமை` என்பது ஆகுபெயராய்ச் சிறியவாகிய உடல்களைக் குறித்தது. சிவன் உயிர்களின் இதயங்களில் சுவர் வடிவாய் நிற்றலைச் சாந்தோக்கிய உபநிடதம் தகர வித்தை கூறுமிடத்தில் கூறிற்று. `அம்மாதேவன்` எனச் சுட்டு வருவித்துரைக்க.
இதனால், சிவன் பெரியவற்றிற்கெல்லாம் பெரியவனாய்ச் சிறியவற்றிற்கெல்லாம் சிறியவனாய் நிற்கும் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.