ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

English Meaning:
Lord Appears in Prayer and Penance

My Lord is of infinite greatness,
Yet is He within the littleness of this fleshy body;
Beyond the ken of Celestials is He;
Yet is prayer and penance
He Himself shall appear to you.
Tamil Meaning:
சிவன் தனது ஆற்றலால் தானே உலகத்தை யெல்லாம் தாங்குகின்றான்; அதனால் அவன் மிகப்பெரிய பொருள் போலத் தோன்றினும் தனது ஆற்றலாலே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியனும் ஆகின்றான்; எட்டுப் பெருமலைகளிலும் நின்று நிலத்தை நிலைபெறுவிக்கின்றான்; நிலம் முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள பெரிய கடலாயும் விரிந்து நிற்கின்றான்.
Special Remark:
`அவனது ஆற்றல் எத்தகையது? எவ்வளவினது? என அறிதல் அரிது` என்பது குறிப்பெச்சம். `சாரான்` என்பது பாடமன்று. சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சிவனது ஆற்றல் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.