ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

English Meaning:
She is Beginningless

She is light that shines
In those who severed their Karmas hard,
She is Truth of all those who reach Her,
She is the Mother that took me into Her vassalage,
The Lord is Her Spouse
Yet Beginningless is She.
Tamil Meaning:
என்னை அடிமையாகக் கொண்ட அந்தத் தலைவி, வினை நீங்கியவரது உள்ளத்தில் ஞானமாய் நின்று, தன்னைப் புகலிட மாக அடைந்தவர்க்கெல்லாம் மெய்ப்பொருளாய் (சத்தாகி) நிற்பாள். இனி அவள், சிவனிடத்தில் அவனைத் தலைப்பட்டுணரும் பொழுது அவனோடு இயற்கையாயுள்ள எண் குணங்களாயும் நிற்பாள்.
Special Remark:
`உள்ளொளியாய்` என ஆக்கம் வருவிக்க. ``ஈசன் கண்`` என்றதில் ஏழாம் உருபு வகையுளியாய் அடுத்த அடிமுதற்கண் நின்றது. இவ்வாறன்றி, `ஈசன் அவளுக்குக் கணவன்` என்பாரும் உளர். அனாதியானவற்றை ``அனாதி`` என்றார். ``காண`` என்னும் செயவெனெச்சம், தனக்குரிய நிகழ்காலத்தில் வந்தது. சிவனது எண்குணங்களில் `வரம்பில் இன்பம்` எனப்படும் நிரதிசயானந்தம் இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது.
இதனால், தமக்கு அருள்புரிந்த சத்தி சத்துச் சித்து ஆனந்தமாய் நிற்றல் கூறப்பட்டது.