
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.
English Meaning:
She Cleanses the HeartShe is Virgin
In Muladhara seated,
She is Mistress peerless,
She is Mother Supreme,
She beckoned me apart
She separated my impurities
She loved my heart,
And there She entered.
Tamil Meaning:
தென்கோடியில் உள்ள இனிய கடற்கரையில் எழுந் தருளியிருக்கும் குமரியாகிய வயிரவி, தன்னோடு இணை ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவி; அதனால், அவள் ஒருத்தியே உலகத்திற்கு முதல்வி. அவள் என்னை உலகச் சார்பினின்றும் நீக்கித் தனியனாகச் செய்து, பின் தனது துணைமையில் இருக்கவைத்து, இன்பத்தை மிக உண்டாக்கி, இவ்வாறு என் உள்ளத்தில் நின்று பயனளித்தாள்.Special Remark:
மேல் (1082) ``கன்னித்துறை`` என்பதனை உருவக மாக்கி உரைத்தாரும், இங்கு, ``தென் மூலை`` என்றதற்கு அவ்வாறு உரைத்தலில் திட்பங் கொள்ளாது நெகிழ்ந்து, இப்பொருளையே கருதுவாராயினார். ``நனிபடுவித்து`` என்பதில் பகர மெய் விரித்தல். படுவித்தலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage