ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

English Meaning:
She Assumes Manifold Forms

She assumes a million, million forms,
She sports the garland of Kalas sixteen,
She beamed forth the lights three — Fire, Sun and Moon
She the Good Mother
On the cool heights of head within stands.
Tamil Meaning:
வணங்குவாரது உச்சிமேல் நிற்பவளாகிய `வயிரவி` என்னும் நல்ல சத்தி, அளவிறந்த வடிவுகளைக் கொண்டாள், கொண்டு, அக இருளை நீக்குதற்கு `அறுபத்து நான்கு` எனப்படும் கலைத்துறைகள் அனைத்திலும் நூல்களை ஆக்கினாள். புற இருளைப் போக்குதற்கு வானத்தில் விளங்கும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் படைத்தாள்.
Special Remark:
`உயிர்களின் பொருட்டு அவள் அளித்தன தாம் பல, என்றவாறு. `அதனால், அவளை மறாவது வழிபடுதல் உயிர்கட்குக் கடன், என்பது குறிப்பெச்சம். மாலை, மொழிமாலை. விண்டனள் - தோற்றுவித்தாள். தண்மை - தணிவு; வணக்கம். வணங்குவாரது தணிவு, அவரது தலைமேல் ஏற்றிச் சொல்லப்பட்டது.
இதனால், சத்தியது உதவியை உயிர்கள் மறக்கலாகாமை கூறப்பட்டது.
``அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்`` 1
எனச் சிவஞானச்சித்தி கூறும்.