ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

English Meaning:
She is Transcendental End

She is the Beginning,
She is the Beginningless,
She is the Cause
She is the Causeless
She is the Light
She is the Not-light
She is the Bliss that is Beauty Divine,
She is the Mother Supreme
She is Samadhi, the transcendental End
She is Manonmani, the Jewel of the Inmost Mind
She is my sentience entered,
And in my heart abided.
Tamil Meaning:
என் உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு எல்லா வற்றையும் அறிவித்துக்கொண்டு என்னோடு உடனாய் இயைந்திருக் கின்ற சத்தி, ஆதியாதல் முதலிய பல பெருமைகளை உடையவள்.
Special Remark:
ஆதி - தானே எல்லாவற்றிற்கும் முதல்வி. அனாதி - தனக்கு ஒரு முதற்பொருள் இல்லாதவள். காரணி - தானே எல்லா வற்றுக்கும் காரணமாய் இருப்பவள். அகாரணி - தனக்கு ஒரு காரணம் இல்லாதவள். சோதி - ஒளியாய் இருப்பவள். அசோதி - இருளாயும் இருப்பவள். சோதி, `அசோதி` என்பன முறையே அறிவையும், அறி யாமையையும் உணர்த்தி நின்றன. அறியாமையைச் செய்வது மலமே. எனினும், அதன் சத்தியைத் தூண்டி அதனைத் தொழிற்படச் செய்தல் பற்றிச் சத்தி, இருளாயும் இருக்கின்றாள். ``சுகபரம்`` என்பதை, `பரசுகம்` என முன்பின்னாக வைத்து, `மேலான இன்பம்` என உரைக்க. `மேலான இன்பத்தை (சிவானந்தத்தை)த் தரும் சுந்தரி` என்க. `சுந்தரி` என்பது இயற்பெயரளவாய் நின்றது. `சமாதியில் மனோன்மனி மாது` எனக்கூட்டி, `சமாதி நிலையில் மனோன்மனி என்னும் சத்தியாய் விளங்குபவள்` என்க. சமாதி, இங்கு மேற்கூறிய துவாதசாந்தத்தில் உணர்வை நிறுத்தி ஒன்றச்செய்தல். மங்கலி - என்றும் நன்மையே உடையவள்; `சிவை` என்றவாறு.
இதனால், ``கலைத்தலை இருக்கும்`` என மேற்கூறிய அவளது பெருமைகள் பலவும் விரித்துக் கூறப்பட்டன.