ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

English Meaning:
Devi is in Conch Mudra

Thus chant ``Sam`` to pervade Jiva`s Prana
And adopt Conch Mudra
That dispels (Ya`s) Jiva`s Maya;
The Supreme Devi there in centre
Shall luminous appear.
Tamil Meaning:
மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.
Special Remark:
முதல் இரண்டடிகள் அனுவாதம். கையை நிமிர்த்திப் பெருவிரல் தவிர மற்றைய நான்கு விரல்களையும் சேர்த்து நீட்டிச் சிறிது வளைத்துப் பெருவிரலை வளைத்து அதன் நுனி சுட்டுவிரலின் அடியில் பொருந்த வைப்பதே சங்க முத்திரையாம். `இது மாயையின் விரிவைக் குறிக்கும்` என்பது இங்குக் கூறப்பட்டது. இம்முத்திரை தேவர்கட்கும், தேவகணங்கட்கும் செய்யும் தர்ப்பணத்திற்குக் கொள்ளப் படுவது. இதனால் விரல் நுனிகளின்வழிச் செல்லும் நீர் `தேவதீர்த் தம்` எனப்படும். `கணபதி, கந்தர், தேவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் இவர்களுக்கும் இவ்வாறே தர்ப்பணம் செய்யப்படும் ஆகையால், `சங்க முத்திரையின் நடுவில் தேவி விளங்கு வாள்` என்றார். எனவே, `பிராணாயாமத்தின் வழியான தியானம், செபம் இவைகளோடு தேவிக்குத் தர்ப்பணமும் செய்க என்றாராயிற்று.
``கூவிய சீவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து, `மாயையாக விரிக்கின்ற சங்க முத்திரை நடுவுள் தேவி திகழ்ந்துநின்றாள்` என முடிவுசெய்க.
இதனால், சத்தியது தர்ப்பணம் விதிக்கப்பட்டது.