ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

English Meaning:
Bhairavi Glows in Rapture

Her crown is studded with stones
Brilliant like a million moons,
She wears Kundalas of radiant gems in her ears
Her glance is like the gentle doe`s
Her eyes are the Sun and Moon;
As of red gold She in rapture glows.
Tamil Meaning:
இன்னும் இவள், பல வயிரங்கள் இழைத்த கோடி சந்திரன்போலும் அழகிய முடியை அணிந்தவள்; சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரத்தின குணடலத்தை அணிந்த காதினை உடையவள்; மான் போல மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள்; சிறந்த ஒளிகளாகிய சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவள்; பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையும் நிரம்ப உடையவள்.
Special Remark:
திருமுடி, அன்மொழித்தொகை. `கன்மணி குண்டலக் காதி` எனப் பாடம் ஓதி, இங்கும், `மணி` என்பதற்கு `அழகு` எனப் பொருள் கொள்ளுதல் சிறக்கும், ``வன்னி`` என்றது அதனையுடைய கண்ணினை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். நிரம்புவது சிவசத்தித் தன்மை என்க.
இவை மூன்று மந்திரங்களாலும் வயிரவியது தியானவடிவம் கூறப்பட்டது.