ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

English Meaning:
Meditate on Her and Become Light Radiant

The Three Gods are there contained;
They who meditate on Her
Will not go the way of fleshy Jivas, Tattva bound;
They radiant become, the blessed ones
Who on Tiripurai meditate.
Tamil Meaning:
உலகிற்குக் காரணர்களாகின்ற `அயன், அரி, அரன்` என்னும் மூவரும் வயிரவியது அழிப்பும், காப்பும், படைப்பும் ஆகிய செயல்களில் ஒரு கூற்றிலே அடங்குபவர் ஆதலின், வீடாகிய பெரும் பயனைப்பெற விரும்பி அவளை வழிபடுகின்ற சிறந்த புண்ணியத்தை உடையவர்கள், நிலையற்ற அம்மூவர் பதவிகளுள் ஒன்றனையும் விரும்பார்.
Special Remark:
முதலடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்ச மாய் நின்றது. போகின்ற - அழிகின்ற. `பூதத்தில்` என உருபுவிரிக்க. ``புரம்`` என்றது புவனத்தை. ஆதரர் - விரும்புபவர். என்றது, முன்னர்க் கூறிய மூவரையே. எனவே, `புராதரர் ஆகிய அவர்` என்றதாயிற்று. ``சார்வுழி`` என்பதில் சார்தல், வாளா அடையாயிற்று. போகும் - அவ் வழியில் ஒழுகுகின்ற. `போகும் புண்ணியத்தோர்` என இயையும்.
இதனால், `வயிரவியை வினைநீக்கம் வேண்டி நிட்காமிய மாக வழிபடுதலே சிறந்தது` என்பது கூறப்பட்டது.