ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.

English Meaning:
Perform Nyasa, Kavacha and Mudra

Chant Kavacha Mantra exalted,
Invoke that,
For your body to receive protection;
And then perform Sula Mudra
And chant Netra mantra,
Thus worshipping,
Will ever rebirth harass you?

Tamil Meaning:
சிகா மந்திரத்தில் உள்ள `வஷட், என்னும் முடிபு சிறிது வேறுபட்ட `வௌஷட்` என்பது கவச மந்திரத்திற்கும், `பட்` என்பது அத்திர மந்திரத்திற்கும் முடிபாகும். நேத்திரங்கட்குரிய மந்திரத்திற்கு, பொதுவாயுள்ள, `நம:` என்பதே முடிபாம். நேத்திர நியாசத்தில் திரிசூல முத்திரை காட்டல் வேண்டும். சத்தி வழிபாட்டில் யோனி முத்திரை காட்டலும் பொருந்தும்.
Special Remark:
இவ் இரண்டு மந்திரங்களிலும் எடுத்துச் சொல்லப் பட்டவை, `இருதயாய நம:, சிரசே நம:, சிகாயை வஷட், கவசாய, வௌஷட், அஸ்த்ராய பட், நேத்ரோப்யோந் நம:` என்னும் அங்க மந்திரங்கள் ஆறுமாம். ``கொண்டு`` என்பதை, `கொள்ள` எனத் திரிக்க ``பகை நின்ற`` என்பது, `பகைக்கு - பகையை அழித்தற்கு - நின்ற, என்றவாறு, ஆதி - வயிரவி. `ஆதியிடத்து நின்ற` என்க, `பாரென்று` என்பது பாடம் அன்று. தொகை - பொது `நேத்திரம் தொகையோடு நின்றன` என மாறிக் கூட்டுக. ``நின்றன`` எனப் பன்மை கூறியதனால் அது பன்மை வாசகமாகச் சொல்லப்படுதல் கொள்க. `வருவித்தல்` என்பது இடைக் குறைந்து, `வருத்தல்` என நின்றது. `சிரோ மந்திரம் சுவஹாந்த மானது`, என்பாரும் உளர். `நம:` பொதுவாக எல்லாவற்றிற்கும் உரியதே. அஃது ஒன்றே பட இம்மந்திரங்கட்குப் பொருளுரைப் பாரும் உளர். அவர், `வம்சம்` என்பதையும், `அந்தம்` என ஓதித் தமக்கு வேண்டியவாறு உரைத்துப் போவர்.
இவ் இரண்டு மந்திரங்களாலும் அங்க மந்திரங்கள் கூறப்பட்டன, வழிபாட்டில் இவை அங்க நியாசத்திற்கும், பிறவற்றிற் கும் பயன்படுதல் கருதி.
சம்மிதா மந்திரங்களுள் பிரம மந்திரம் ஐந்தும் சத்தி வழிபாட்டில் சத்திக்கு ஏற்பச்சொல்லப்படும். அங்கமந்திரங்கள் அவ்வாறன்றி எவ்விடத்தும் ஒருபெற்றியவாயே வரும் என்க.