ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

English Meaning:
Bhairavi`s Form

She holds the trident and skull in Her hands
She holds are serpent-sloop and elephant-goad
She has hands four,
She stood one with Siva,
Whose Form neither Brahma nor Vishnu knows,
She of ethereal Form.
Tamil Meaning:
வயிரவிக்கு அழகிய கைகள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் என்பவற்றை ஏந்தியிருப்பாள். இவள், மாலாலும், அயனாலும் அறியப்படாத அழல் வடிவத்தை உடைய சிவனுக்குச் சிறந்த திருமேனியாகின்ற அருளேயன்றி, வேறல்லள்.
Special Remark:
``சூலம் கபாலம் கையேந்திய சூலி`` என்றது உடம் பொடு புணர்த்தல். வலக்கையிரண்டில் மேலதிற் சூலமும், கீழதில் அங்குசமும் இடக்கை யிரண்டில் மேலதில் கபாலமும், கீழதில் நாகபாச மும் உள எனக் கொள்க. `இவள் சிவனது அருளே` என்றது, `சாந்த ரூபி` என்பதன்கண் ஐயம் அறுத்தவாறு.