ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

English Meaning:
She Enters the Heart in Endearment

She of shoulders slender as bamboo,
She of tresses laden with fragrant blossoms,
She adorns crescent moon for a jewel,
She of matted locks pure,
She holds the trident
She the Beautiful,
She in endearment,
In my heart constant stood.
Tamil Meaning:
[இதன் பொருள் வெளிப்படை.]
Special Remark:
வேய் - மூங்கில். விரை - நறுமணம். ஏய - பொருந்திய. குழல் - கூந்தல். `பிறையைச் சூடிய ஏந்திழை` என்க. பிறைசடையில் உள்ளது. சூலினி - சூலத்தை ஏந்தியவள். ஏய் உள்ளம் - தான் இருத் தற்குப் பொருந்திய உள்ளம்; அஃதாவது, அறிவும், அன்பும் நிரம்பிய உள்ளம். ``சுந்தரி`` என்பதை ``குழலி`` என்பதன் பின்னர்க் கூட்டி, அது காறும் ஒருவகைக் கோலமும், பின், ``சூலினி`` என்பது காறும் வேறொரு வகைக் கோலமும் ஆக இருவேறு வடிவங்களைக் கூறினமை கொள்க. முன்னது அமைதிக்கோலமும், பின்னது கடுமைக் கோலமுமாதல் அறிக. எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இது முதல் ஐந்து மந்திரங்களால் சத்தி தமக்கு அருள் புரிந்த வாறு கூறினார் என்க.