ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.

English Meaning:
She is in Mani Mantra Yoga

Smeared in unguents fragrant,
Bedecked with flowers beauteous,
Dressed in clothes new and comely
She is in Mani Mantra Yoga
That spells no word;
There shall you hear the sound of Her conch
For yojanas around;
Thus is Tiripurai, whom you seek.
Tamil Meaning:
எங்கும் நிறைந்தவளாகிய சத்திக்கு உரிய பூசைப் பொருள்களாவன. சந்தனம் குங்குமம் பனிநீர் முதலிய நறுமணப் பொருள்கள். சூடத்தக்க மிக்க பல மலர்கள், ஐவகை வாத்தியங்கள், ஒலிக்காத மணிபோல வாய்க்குள்ளே சொல்லப்படும் மந்திரங்கள் முதலியனவாம்.
Special Remark:
பூசனைப் பொருள்களில் சிறந்தன சிலவற்றை எடுத்தோதி, ஏனையவற்றை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். வழக்கம் பற்றி அவற்றை உணர்தல் எளிதாதலின், ``தேசந் திகழும் திரிபுரை` என்பதனை முதற்கண் வைத்து, `திரிபுரைக்கு` என உருபு விரித்துக்கொள்க. காண். முன்னிலையசை.
இதனால், சத்தி வழிபாட்டிற்குரிய பொருட்படை கூறப் பட்டது.