ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

English Meaning:
Chant ``Sam``

From the mantra ``Si``
Take away ``i``
Conjoin the Bindu letter ``M``
The the Mantra ``Sam`` do you chant
For Pranayama practice to promote.
Tamil Meaning:
சத்தி வழிபாட்டில் பிராண வாயு வசப்படுதற்கு உரியதாகிய உபதேசத்திற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, இகர உயிர், அம்ச மந்திரத்தினின்று பிரித்துத் தனியே தயக்கம் இல்லாமல் சொல்லப்படுகின்ற சகர மெய்யை முன்னர்க் கொண்டு, இறுதியில், முடித்துச் சொல்லப்படும் விந்துவாகிய மகாரத்தையும் ஏற்று நிற்கச் சொல்லப்படுவதாம்.
Special Remark:
எனவே, `சிம்` என்பதே அம்மந்திரமாதல் அறிக. மூன்றாம் அடியை முதற்கண்வைத்து உரைக்க. `மந்திரம்` என்னும் வட சொல்லில் `இகரம் சகாரத்தை முன்கொண்டு` என்க. இங்கு, `முன்` என்பது, புணர்ச்சிவிதிகளின் முறைப்படி, `இடமுன்` என்க. வாசிப் பிராணன் - யோக நூல்களில் `வாசி` எனவழங்கும் பிராணன். `பிராணனுக்கு` என்னும் நான்காவது தொகுத்தலாயிற்று, கூசுதல், இங்கு, அடங்கு தலின் மேற்று. ``கூவு`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய்ச் செயப்படுபொருள் மேல் நின்றது. இனி ஏவல் முற்றாக்கி, அது கருத்து வகையால் பெயர்ப் பயனிலையாய் நின்றதாக உரைத்தலுமாம்.
இதனால், சத்தி வழிபாட்டில் கொள்ளப்படும் பிராணாயாம மந்திரம் கூறப்பட்டது.