ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.

English Meaning:
Chant Hridaya Mantra and Sikha Mantra

Chant the Mantra,
That is of Her Heart (Hridaya Nama)
And say ``Na Ma``
The offering of Prana
That courses through central Sushumna,
Reaches the heights of cranium top.
There, chant Sikha Mantra (Sikhayai Nama).
Tamil Meaning:
இருதய மந்திரமும், சிரோமந்திரமும் `நம:` என்னும் முடிபினை உடையன. சிகா மந்திரமும் `வஷட்; என்னும் முடிபினை உடையது.
Special Remark:
`இருதய மந்திரமும் `நம` என்று கண்டு பேசும்; தலை மேல் ``மந்திரமும்`` `நம` என்று கண்டு பேசும், சிகை `வம்சம்` என முடிவு கொள்க. ``மந்திரமும்`` என்பது, ``தலைமேல்`` என்பதனோடும் சென்று இயையும். `வம்,சம்` என்பன வகாரத்தையும், ஷகாரத்தையும் குறித்து `வஷட்` என்பதை உணர்த்தின. ``பேசும்`` என்பது, `பேசப் படும்` என்னும் பொருளது. ``வேணு நடுவு மிக நின்ற ஆகுதி பூணும் நடு என்ற`` என்றது, `மூங்கிற் குழல்போலும் சுழுமுனை நாடியின் உள்ளே ஓங்குகின்ற மூலாக்கினியை எதிரேற்றுக்கொள்கின்ற நடுவிடமாகிய உச்சிக்கு உரியது எனப்பட்ட சிகை வம்சம், என்றவாறு.