ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

English Meaning:
She is Awesome

She is the Supreme One, Jivas seek,
She is of tapas mighty,
She is of dark tresses,
She is the Causal being,
She is Narayani,
She dissolves body, life and pasas at once,
She is the Awesome One;
She dwells in my heart.
Tamil Meaning:
சத்தியானவள், அரிய உயிர்களின் பக்குவங் களையே எப்பொழுதும் நோக்கி நிற்பவளாதலின், இயல்பிலே அவள் ஞானத்தைத் தருகின்ற சாந்த ரூபியாயினும், உயிர்களது அபக்குவ நிலைபற்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் துன்பத்திற்கு ஏதுவான தொழில்களைச் செய்பவளாகின்றாள். எனினும், என் உள்ளத்தில் அவள் சாந்தரூபியாயே விளங்கு கின்றாள்.
Special Remark:
``அருந்தவம்`` என்பது அதன் பயனாகிய ஞானத்தின் மேல் நின்றது. காரியல் - மேகம் போன்ற. கோதை, அதனை அணிந்த கூந்தலை உணர்த்திற்று. இது சாந்த வடிவத்தைக் குறித்தவாறு. காரணி - தோற்றத் திற்குக் காரணமாய் இருப்பவள்; படைப்பவள், ``நாரணி`` என்றது, `காப்பவள்` என்றவாறு, ஊர்தல் - உலாவுதல். `ஊர் - உடம்பு` என்பாரும் உளர். ``ஊரும் உயிரும் உலகும்`` என்றது தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும். கோரி - கோரம் உடையவள். கோரம் - கொடுமை.
இதனால், சத்தி உயிர்களின் பொருட்டு முத்தொழில் செய்தலைக் கூறுமுகத்தால், வயிரவி அச்சத்தியாதல் கூறப்பட்டது.