ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

English Meaning:
States of Grace-Receiving Differ

As the sun rises,
The lotuses wake;
But some bloom;
And some do not;
That happens
As their differing conditions are;
Even though sun`s beams
Alike strike them,
The differing effects
Are result of
Differing states of Grace.
Tamil Meaning:
`படைக்கும் சத்தி, காக்கும் சத்தி, அழிக்கும் சத்தி` என இவ்வாறு சத்திகள் வேறு வேறாகச் சொல்லப்படினும், உண்மையில், அவை அனைத்தும ஒரு சத்தியின் பேதங்களே. அஃது எவ்வாறெனி ல் பூக்கள் அனைத்தும் ஒரு நிலையையே அடையாமல் பல நிலைகளை அடைகின்றன. (சில அரும்பாகவும், சில போதுக ளாகவும், சில மலர்களாகவும்,சில வாட்லகளாகவும் ஆகின்றன) அந்த வேறுபட்ட நிலைகள் அனைத்திற்கும் ஏற்பச் சூரியனது கதிர்கள்` என்னும் வகையில் ஒன்றேயாவது போல்வதாம்.
Special Remark:
சிவசத்தியின் வேறுபாடு `பிறவற்றை நோக்கிய வேறுபாடேயன்றித் தன்னிலே வேறுபட்ட வேறுபாடு அன்று` என்பதாம். ``அருட் பேதம்`` என்பதை முதலில் வைத்து, ``பேதித்துப் பேதியாவாறு`` என முடிக்க. ``தம்`` என்பதனை, ``செயல்`` என்பதனோடும் கூட்டுக. ``வினை`` என்பது, அது நிகழ்தற்கு ஏதுவாகிய பக்குவத்தைக் குறித்த ஆகுபெயர். ``பேதிப்ப`` என்பதில் உள்ள `பேதித்தல்` என்னும் செயலின் வினை, செயலையுடைய பதுமாதிகள் மேல் ஏற்றப்பட்டது. சேட்டித்தல் - செயற்படுத்தல். ``ஆதித்தன்`` இரண்டில் பின்னது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பேதித்துப் பேதியவாறு`` என்னும் பயனிலைக்கு. `அக்கதிர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.
`அருட் பேதம், ஆதித்தன் தோன்றப் பது மாதிகள் செயல் பேதித்து நிகழும்படி அவனது கதிர்கள் செயற்படுத்துமிடத்து அக்கதிர்கள் பேதித்தும் பேதியாவாறு` என வினை முடிவு செய்க.
இதனால், முன் மந்திரத்தில் சத்தி பலவாதல்போலக் கூறப் பட்டமை பற்றி, `சத்திகள் பலவோ` என எழும் ஐயம். `சத்தி செயல் பற்றிப் பலவாகச் சொல்லப்படுகின்றதேயன்றி, உண்மையில் பலவன்று. `ஒன்றே` எனஅபதை உவமையால் கூறித் தெளிவிக்கப்பட்டது.