ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

English Meaning:
Yet in Turiya, Karmic Effects Are

Well may you iron
From fire remove;
The iron still retains
The effect of fire (experience);
So too,
Even if sense organs
Are in Turiya State extinguished
The impure effect of Karmic acts
Will still there be.
Tamil Meaning:
வேதம் முதலாகிய சொல்லுலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும் தனது வடிவமாகக் கொண்டுள்ள சிவன் புலப்பட்டு நின்று, தனது திருவருளாகிய தேனை வழங்குகின்ற நின்மலாவத்தையில் கடக்க வேண்டிய சாக்கிரம் முதல் நான்கையும் கடந்து முடிந்தபின் துரியாதீதமே பாரவத்தையாய் விளங்கும்.
Special Remark:
என்றது, `விரைவில் பராவத்தை கைகூடும்` என்றதாம். தெரிசனாவத்தை, பொருள்களின் இயல்பை உள்ளவாறுணரும் நிலை. அது ஞானாவத்தையாதல் அறிக. `விடு` என்பது `வீடு` எனத்திரியாது செய்யுள் நோக்கி, `விடு` என்றே, நின்று, விடுதலாகிய தொழிலையே குறித்தது. உம்மை, சிறப்பும்மை. `விடுத்திட வேண்டிய வகை` என்றதனால் அவைமுதல் நான்கு நிலைகளேயாயின. `விட்டது` என்பதே துணிவுப் பொருளை உணர்த்துமாயினும், `ஆய்விட்டது` என்றல் உலக வழக்கு. `முடிந்துவிட்டது` என்பது அதன் பொருளாகும். அது பற்றி, `அடைந்துவிட` என்பதை, `அடைந்தாய்விட` என்றார். `நின்மலம்` என்பதை ``மலம்`` என்றது முதற்குறை. `நிருவிகற்பம்` என்பது `விகற்பம்` என்றதும், `சன்மார்க்கம்` என்பது `மார்க்கம்` எனவும் வந்த செய்யுட்களைக் காண்க.l
இதனால், `நின்மல துரியாதீதமேபராவத்தைக்கு நேர்வாயில்` என்பது கூறப்பட்டது.