
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.
English Meaning:
Self-Knowledge Leads to Jnana-MudraWhen Jiva attains Self-Knowledge,
Then he one with Siva becomes;
The Malas perish;
Birth`s cycle ends;
Then will grand Mukti be;
The lustrous light of Jnana;
And the Impress of Divine Knowledge too (Chin Mudra).
Tamil Meaning:
ஆன்மாத் தனது இயல்பை உள்ளவாறறிந்தால் தான் பாசத்துடன் நில்லாது சிவத்துடனே நிற்கும். அவ்வாறு நிற்கும் பொழுதுதான் மலங்களின் சேட்டை ஒழியும். பாசங்களின் சேட்டை ஒழிவே பிறப்பின் ஒழிவாகும். எவ்வாற்றானும் மீண்டும் பிறவி எய்தாத நிலையே முடிநிலைப் பரமுத்தியாகும். மற்றும் அதுவே நன்னெறியாகிய ஞானத்தால் அடையப்படும் பேரறிவுப் பொருளும் ஆகும். அது சின்முத்திரை வழியாகக் கிடைக்கும்.Special Remark:
சேட்டையை, `குணம்` என்றார். ``பின்`` என்பது, `மற்று` என்னும் பொருளில் வந்தது. `பின்னும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மையும், `அதுவே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயின. `பின்னும் அதுவே` என்பதை, ``சன்முத்தி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `நன்றது` என்பது எதுகை நோக்கி, `நன்னது` என வந்தது. `முத்திரையால் என உருபு விரிக்க. சின்முத்திரையைப் பெறுமாறு, வருகின்ற மந்திரத்தில் காண்க.இதனால், முன் மந்திரத்தில் கூறிய தத்துவ ஞானத்தால் ஆன்ம சுத்தி உண்டாக, அதன்பின் நிகழும் ஆன்ம லாபமும் அதன் சிறப்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage