ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.

English Meaning:
Relapse Into Sakala State and Redemption by Grace

Those who have reached
The Suddha Atita-State
If to the Sakala State relapse,
Lord`s Grace, them leave not;
Still standing close to Lord,
They enjoy not pleasures of world;
And at the end, Samadhi entering,
They in Lord as one unite;
—All these by Grace ultimate.
Tamil Meaning:
மத்தியாலவத்தையிற்றானே நின்மல துரியாதீத நிலை (இதுவே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படுவது) தோன்ற, ஆன்மா அதிலே நிலைத்திருக்குமாயின், சிவனது திருவருள் அதனை விட்டு நீங்காது. அந்நிலையில் நீ பராவத்தையை அடைவதற்குச் சித்த சலனத்தால் பற்றக்கூடிய உலகியல் நிலை வந்து சிறிதும் தீண்டாதபடி சமாதி நிலையில் நில். அப்பொழுது முன் சொன்ன திருவருள் உன்னைச் சிவனோடு ஒன்றுபடுத்தும்.
Special Remark:
`ஆங்கண்` என்பது பெயரால் நின்று உருபேற்றது. `தான்` என்றது சிவனை. `ஒன்ற முதலாகும்` என்றாராயினும், `முதலாய் நின்று ஒன்றுவிக்கும்` என்பதே கருத்து.
இதனால், நின்மல துரியாதீதத்தில் சிவன் அருளுருவாய் நின்று, பராவத்தையில் ஆனந்த உருவாதல் கூறப்பட்டது.