ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

English Meaning:
By Grace Jiva Becomes Knower

Devoid of knowledge
Are Tattvas thrity and six;
The Self that knows
I know not;
``You shall know``
Thus blessed Nandi;
Then I knew
That I am the Knower.
Tamil Meaning:
தான் `சீவன்` என்கின்ற நிலைமை நீங்கி, `சிவன்` என்கின்ற நிலைமையை அடைந்த பெரியோன் சிவன் சத்தி இருவனாயும் நேரே கண்டது தன்னுடையே உடம்பிற்குள்ளேயாகும்.
Special Remark:
`சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தையாகிய நின்மலா வத்தையிலாம்` என்றபடி `அந்நிலையை அடைந்தவன் பின் பரா வத்தை அடைதல் உறுதி` என்பது கருத்து. முன் இரண்டு அடிகளில் சிவனும், பின் இரண்டு அடிகளில் சத்தியும் குறிக்கப்பட்டனர். அவ் வடிகளின் பொருள் வெளிப்படை ``கண்டது`` என்னும் ஒருமை அத் தொழிலைக் குறித்தது. `கண்டது ஊனிடை` என மாற்றியுரைக்க.
இதனால், `சகலத்திலேயே நின்மலாவத்தையில் சிவ சத்திகளை அவர்களது ஞானமாகிய கண்ணால் காணுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.