ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.

English Meaning:
By Grace Jiva Becomes Knower

Devoid of knowledge
Are Tattvas thrity and six;
The Self that knows
I know not;
``You shall know``
Thus blessed Nandi;
Then I knew
That I am the Knower.
Tamil Meaning:
ஆணவ இருளைச் சிறிதே நீக்குவனவாகிய மாயா காரியக் கருவிகளும் அவற்றால் சிறிதே நீக்கப்படுகின்ற ஆணவ இருளும், அதனை நீக்க உதவுகின்ற சிவசத்தியும் அச்சத்தியால் காப்பாற்றப்படும் ஆன்மாவும் ஆகிய இவைகளை முறையாக முன்னர் உணர்தல் வேண்டும். (அவ்வாறு உணர்தலே அரிது. ஆயினும்) அதன்பின் அவற்றோடு நில்லாது ஆன்மாவின் எளிய நிலையையும், அந்நிலையை உணர்ந்து சிவன் அதன்மேல் கொள்ளும் இரக்கத்தையும், அவ்விரக்கத்தால் ஆன்மாவிற்கு உண்டாகின்ற அனைத்துப் பொருள்களையும் பற்றிய உண்மையான உணர்வின் சிறப்பையும் உணர்ந்து, பின் பல பொருள் உணர்வை விடுத்துச் சிவன் ஒருவனையே உணர்கின்ற உணர்வு உண்டாகுமானால், அதன் பின்பே சிவனது பேரின்பம் ஆன்மாவிற்கு உளதாகும்.
Special Remark:
பின்னர், ``பரை`` எனத் திருவருள் குறிக்கப்படுதலால், முதற்கண் ``ஒளி`` என்றது மாயையாகிய ஒளியையே குறித்தது. அளியது - அளிக்கத்தக்கது. அஃதாவது, இரங்கத்தக்கது.
துகளறுபோதத்தில், ஒளியை உணர்தல், முதல் ஏழு அவதாரங் களாகவும், இருளையுணர்தல், அடுத்துமூன்று அவதரங்களாகவும், ஆன்மாவை உணர்தல், அடுத்த `தன்னுண்மை சைதன்னிய தரிசனம்` எனவும், இரக்கத்தை (திருவருளை) உணர்தல் `ஞானதரிசனம்` எனவும் தெருளைஉணர்தல் அடுத்த எட்டு அவதரங்களாகவும் கூறப் பட்டன. இவற்றின் பின்னர்க் கூறப்பட்டன எல்லாம் சிவன் ஒருவனையே உணர்ந்து நிற்கும் நிலைகளாம். அந்நிலைகளே சிவானந்த விளைவுகளுமாம். ``பரை`` என்பது பொதுவாக `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், நின்மலாவத்தையின் உட்கூறுகள் ஒருவாறு விளக்கப்பட்டன.