ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

English Meaning:
Wealth of Holiness Leads to Union in Siva

They that are possessed of wealth of Holiness
Are not for dark Hell distined;
They that are possessed of wealth of Holiness
Are not for delicious heaven too;
They that are possessed of wealth of Holiness
Depart from Mala`s hubble;
They that are possessed of wealth of Holiness
Depart from all things unworthy;
And so Siva become.
Tamil Meaning:
ஆணவ மலத்தால் வளைக்கப்பட்ட கோணல் நீங்கி நேரான நிலையை அடைந்தோர் சிவமே ஆயினமையால், சுவர்க்கத்தை விரும்புதல், நரகத்திற்புகுதல், மாயை கன்மங்களின் குழாத்துள் இருத்தல், அவற்றால் பிறந்து இறந்தும், இறந்துபின் பிறந்து உழல்வதாகிய பயனில் செயல்களை உடையராதல் ஆகிய இவை அனைத்தையும் விட்டு நலம் பெற்றார்கள்.
Special Remark:
`திருந்தனர்` என்பது எங்ஙனம் பாடம் ஆயிற்று என்பது தெரியவில்லை. ``திரு`` என்றது இன்பத்தை - இன்பம் இன்மை, துன்பம் உண்மையைக் குறித்தது. ``திருந்தினர்`` என்பவற்றோடெல்லாம், ``சிவமாய்`` என்பதனைக் கூட்டி, `விட்டார்` என முடிக்க. சொற்பொருட் பின்வரு நிலைஅணி. `திருந்தியது முன் மந்திரத்திற் கூறிய ஞான சத்தியால்` என்க.
இதனால், மேற்கூறிய இறையருட் செயலால் உயிர்கள் அடையும் முடிநிலைப் பயன் கூறப்பட்டது.