ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நனவாதி தூலமே சூக்கப் பகுதி
    அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
    தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
    கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.
  • 10. நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
    கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
    தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
    நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.
  • 11. ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
    ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
    வேறான ஐந்தும் விடவே நனாவினில்
    ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.
  • 12. மாயையில் வந்த புருடன் துரியத்தில்
    ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
    சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
    ஆய தனுவின் பயன்இல்லை யாமே.
  • 13. அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
    அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
    அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
    முதிய அனலின் துரியத்து முற்றுமே.
  • 14. ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
    கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
    பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
    மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.
  • 15. புரியட் டகமே பொருந்தல் நனவு
    புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
    புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
    புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.
  • 16. நனவில் நனவு புலனில் வழக்கம்
    நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
    நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை
    நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.
  • 17. கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
    கனவினில் கண்டமறத்தல் கனவாம்
    கனவில் சுழுத்தியும் காணாத காணல்
    அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.
  • 18. சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
    சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
    சுழுத்தி அறிவறி வாலே அழிகை
    சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.
  • 19. துரிய நனவாம் இதம்உணர் போதம்
    துரியக் கனவாம் அகம்உணர் போதம்
    துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
    துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.
  • 2. நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
    நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
    நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
    நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.
  • 20. அறிவறி கின்ற அறிவு நனவாம்
    அறிவறி யாமை அடையக் கனவாம்
    அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
    அறிவறி வாயின தான துரியமே.
  • 21. தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
    ஞானம் தனதுரு வாகி நயந்து பின்
    தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு
    மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.
  • 22. ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
    எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
    எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
    ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.
  • 23. ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
    ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
    ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
    ஈதென் றறியும் இயல்புடை யோனே.
  • 24. உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
    அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
    நயப்புறு சத்தியும் நாதனுல காதி
    இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.
  • 25. சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி
    ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு
    தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
    வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.
  • 26. சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
    சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல்
    சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச்
    சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.
  • 27. மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
    மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
    மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
    மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.
  • 28. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
    நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
    அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
    பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.
  • 29. கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச்
    சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும்
    விதறு படாமூனம் மெய்வழி நின்றால்
    அதிர வருவதோர் ஆனையும் ஆமே.
  • 3. செறியுங் கிரியை சிவதத் துவமாம்
    பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
    குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
    அறிவில் சராசரம் அண்டத் தளவே.
  • 30. நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
    கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
    உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
    நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.
  • 31. நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
    ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
    சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
    நின்று பரனாகி நின்மலன் ஆமே.
  • 32. ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம்
    தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி
    மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
    மோன மடைந்தொலி மூலத்த னாமே.
  • 33. மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
    கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
    விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
    தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.
  • 34. போதறி யாது புலம்பின புள்ளினம்
    மாதறி யாவகை நின்று மயங்கின
    வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
    சூதறி வார்உச்சி சூடிநின் றானே.
  • 35. கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
    பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
    திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
    வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.
  • 36. ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
    தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து)
    ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு)
    ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.
  • 37. உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய
    விண்ஆட நின்ற வெளியை வினவுறில்
    அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின்
    கண்நாடி காணும் கருத்ததென் றானே.
  • 38. அறியாத வற்றை அறிவான் அறிவான்
    அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
    அறியாத வற்றை அறிவானைக் கூட்டி
    அறியா தறிவானை யாரறி வாரே.
  • 39. துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
    அரியன தூடணம். அந்நன வாதி
    பெரியன கால பரம்பிற் றுரியம்
    அரிய அதீதம் அதீதத்த தாமே.
  • 4. ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
    ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
    போதம் கலைகா லமேநியதி மாயையும்
    நீதி அராகம் நிறுத்தினன் என்னே.
  • 40. மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
    மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
    கேவல மாகும் சகலமாய் யோனியுள்
    தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே.
  • 5. தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
    ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
    மாசகல் வித்தை நியதி மகாமாயை
    ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.
  • 6. ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
    காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
    தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
    பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
  • 7. பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
    பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
    பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
    பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.
  • 8. உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
    அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
    கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
    அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.
  • 9. தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
    சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
    பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
    மற்றது உண்டி கனாநன வாதலே