
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.
English Meaning:
I Saw Him Within In the Nine CentresIn contemplation deep I sought
The Lord of worlds all,
In the Nine Centres within;
Distinct I saw Him,
He, the Lord of Celestials all;
Intense I sought Him,
And He in my thoughts unfailing stood.
Tamil Meaning:
(சுருதி உத்தி அனுபவங்களால்) அறிய வேண்டு -வதை அறிந்து, அதனால், `உலக முதல்வன் யாவன்` என ஆராய்ந்து, `அம்முதல்வன் சிவபிரானே` என நான் நன்குணர்ந்தேன். பின்பு அவனை என்பால் வருவிக்கும் வழியறிந்து வருவித்தேன். அவன் அவ்வாறே வந்து என் மனத்தில் நிலையாக நின்றுவிட்டான்.Special Remark:
கருத்து - அறியத் தக்க பொருள். `பாரத வருடம் ஒன்பது கண்டமாய் உள்ளது` என்பது ஆகமங்களில் சொல்லப் படுவது. `பிண்டத்தில் நவகண்டமாவன, ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங் -களுமாம்` எனின் அவ்விருவகையினவும் ஒன்றை விட்டு மற்றொன்று இல்லாமையறிக. `கண்டத்தையும்` என இரண்டாவது விரிக்க.பொருத்து, பொருத்துதல்; மூவினையுட் படுத்தல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். இஃது ஆகுபெயராய்த் தனக்குக் காரணமாகிய முதனிலைமேல் நின்று, வினைமுதலை உணர்த்திற்று. எனவே, `உலகிற்கு முதல்வன் ஒருவன் உண்டு` என்பதை அறிந்ததாயிற்று. நிலத்தை `நிலமகள்` எனப் பெண்பாலாகக் கூறும் வழக்குப் பற்றிப் புவனத்தை, `புவனா` என்றார். திருத்து - திருத்தம்; `திருந்து` என்பதன் திரிபு. `திருத்தமாக` (செம்மையாக) என ஆக்கம் வருவிக்க. `மிகு தேவர் பிரான்` என்றது, `சிவபிரான் என்றபடி, `மிகு தேவர் பிரானைத் திருத்து அறிந்தே` என மாற்றியுரைக்க. `வா` என்னும் பகுதி `வரு` எனத் திரிந்து, `து` என்னும் பிறவினை விகுதியோடு புணர்ந்து, `வருத்து` என வருதல் உலக வழக்கில் உள்ளது. இதுவும் ஆகுபெயராய், இதற்குரிய உபாயத்தின் மேல் நின்றது. அது சரியை யாதி தவங்களுள் மேலானதாகிய யோகத்தையே உணர்த்திற்று. சிவன் மனத்தில் மன்னி நிற்றல் நின்மலாவத்தையிலாகும்.
இதனால், மல பரிபாகம் சத்தி நிபாதம் வரப் பெற்றோர் மேலாலவத்தை வழியாக நின்மலாவத்தை அடைதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage