ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

English Meaning:
Charya, Kriya, Yoga and Jnana — Where They Lead To

The acts of Kriya lead to Siva Tattva;
The practice of prolonged Yoga
Leads to Divine Grace and Knowledge;
Contemplation of Lord`s Form, (in Charya)
Confers blessings many;
In Jnana is comprehended
All Cosmic creation at once.
Tamil Meaning:
சிவநெறி மார்க்கம் நான்கனுள் சற்புத்திர மார்க்க மாகிய கிரியையில் நிற்பின் சிவ தத்துவங்கள் ஐந்தும் காட்சிப்படுவன வாம். சிவத்தோடு தன்னை ஒன்றவைத்து உன்னும் சகமார்க்க மாகிய யோகத்தால் சிவனது திருவருளை நிரம்பப் பெறுதல் கூடும். சிவனது ஞானத்தை உணர்தலாகிய சன்மார்க்கத்தால் ஆன்மாவினது ஞானமும் சிவஞானமேயாய், அதுவே தற்சொரூபமாய் நிற்கும். அந் நிலையில் சிவனது எல்லாக் குணங்களும் ஆன்மாவுக்கு உளவாகும். அப்பொழுது ஆன்மாவும் சிவனைப் போலவே எங்கும் நிறைந்து விளங்கும்.
Special Remark:
கல்வி - வித்தை; ஞானம், என்றது சிவ ஞானத்தை. குறி - குறித்தல்; உணர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `தன்` - என்றது ஆன்மாவை. சிவமாம் தன்மையை எய்தினமை தோன்ற, `திரு மேனி` என்றார். `பலவும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அந்த அறிவில்` எனச் சுட்டு வருவிக்க. `அளவு` என்பது `சராசரம்` என்றதனோடும் இயையும். சரியை, கிரியையிற் செலுத்துமுகத்தானே பயன்படுதலின், அஃதொழிந்தவற்றையே கூறினார். கிரியை, யோகம், கல்வி ஆகிய காரணங்கள் காரியங்கலாகவே உபசரிக்கப்பட்டன. மூன்றாம் அடி தளை மயங்கி வந்தது.
இதனால், ஆன்மா நின்மலாவத்தையை அடையும் முறை கூறப்பட்டது.