ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலின் துரியத்து முற்றுமே.

English Meaning:
In Turiyatita Jiva Becomes Knower and Passes
Beyond to Luminous Siva Turiya State

In that Turiyatita State,
The Soul is the Knower verily;
When he passes beyond
From that Turiyatita State
Where Jiva the Knower is
He merges into Luminous Turiya (Siva Turiya)
That the ultimate state is.
Tamil Meaning:
நின்மல துரியாதீத நிலையில் சிவனையன்றிப் பிறி தொன்றையும் தாரகமாகக் கொள்ளாமையால், சடத்தன்மை சிறிதும் இன்றித் தூய அறிவேயாய் நிற்கின்ற ஆன்மா, அந்நிலையில், பழஞ் சுடராகிய சிவனது அவ்வருள் வழியே, தொடர்ந்து அவனையே உணர்ந்துநிற்குமாயின், அவ் வருளால் தனது தூய்மை கெடாது, என்றும் அந்நிலையிலே நிற்கும் நிலை கைகூடுவதாகும்.
Special Remark:
`அவ்வாறு செய்யாவிடில், மீளக் கீழ்நிலையை அடையும்` என்பதாம். `துரியாதீதம்` என்பது, `அதீத துரியம்` எனப் பின் முன்னாகி நின்றது. `முதிய அனல்` என்பதைச் சுட்டும் `அது` என்னும் சுட்டுப் பெயர், செய்யுள் பற்றி முன் வந்தது. `அனல்` என்றது, சுடர் என்னும் பொருளது ஆதலின் ``அதனால்`` என்றது `அருளால்` என்றதேயாம். முதலடியை மூன்றாம் அடியாகவும் அனு வத்தித்துக் கூறியது. `இங்குக் கூறுமாறு நில்லாவிடின் ஆன்மாத்தான் அரிதில் அடைந்த நிலையை இழந்துவிடும்` என்பது உணர்த்தற்கு. இயமானன், `யஜமானன்` - என்பதன் திரிபு. `வேள்வித் தலைவன்` என்பது இதன் பொருள். யஜமானன்` என்பது உலகவழக்கில் பொதுவாகவழக்கினும், செய்யுள் வழக்கில் உயிரையே குறித்தல் அன்றிப் பிறவகையில் பொருள் தாராது. முதுமை, பழமையைக் குறித்தது. `அநாதி` என்பதை, `பழமை என்றல் தமிழ் வழக்கு. இறுதியில் உள்ள `துரியம்`, `கடப்பு` என்னும் பொருளதாய்ப் பாசங்களைக் கடந்ததை உணர்த்திற்று`.
இதனால், அரிதிற் பெற்றதொன்றைப் பேணுமாறு கூறப்பட்டது.