
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.
English Meaning:
Jiva Devoid of Thought in SushuptiOf the Tattvas in Waking State
Four times five are behind left;
The Tattvas four that Antahkaranas form
In Dream State are;
—These you shake off
And into yourself enter;
Then thoughts devoid
The Soul in Sushupti Stands.
Tamil Meaning:
(கனவிலும் பிராணாதி வாயுக்கள் பத்தும் செயற் படுதலால், அந்தக் கரணங்களும் செயற்படவே செய்யும் - அதனால்,) நனவிற்போலக் கனவிலும், மேல் `ஆனைகள் ஐந்து` எனப்பட்ட ஞானேந்திரியப் புலனகள் ஐந்தோடு, கன்மேந்திரியப் புலன்கள் ஐந்தும், இன்னும் பிராணாதி வாயுக்கள் பத்தும் கூடி ஆன்மா அமைதி யுற்றிராதபடி தொல்லையுறவே செய்யும். இந்நிலையில் நிற்கும் ஆன்மா, ஒருமுகப்பட்ட சிந்தனையை விரும்புதலால், புலன்களை யெல்லாம் உதறித்தள்ளி, இருதயத்துட்புகுந்து சுழுத்தியில் நிற்கும்,Special Remark:
`கனவகத்தே, நனவகத்தே (நிற்கும்) உட்கரணங் களோடு, நால் ஐந்தும் வீடா` எனவும், `அகத்தே நின்று உள்ள, உதறி, நினைவகத்தே உள்புக்கு, இன்று இச் சுழுத்தி நின்றான்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க. இப்பொருள் காணமாட்டாதார் சித்தாந்தத்தில் இல்லாத பொருளை இயைபறவும் உரைப்பர்.நினைவகம் - இருதயம். இது சுழுத்தித்தானம். இன்று - இப் பொழுது. அதாவது இருதயத்துட்புக்க பொழுது. `இச் சுழுத்தி என்றது, `நனவும், கனவும் போலப் புலன்களில் தொல்லையில்லாது, அமைதியாய் இருக்கும் சுழுத்தி` என்றபடி.
இதனால், `பெத்த காலத்தில் புலன்களின் நீங்கி நிற்கும் நிலை சுழுத்தி நிலை` என்பதும் கூறப்பட்டது. படவே, துரிய துரியா தீதங்களில் அவை யில்லாமை கூறவேண்டாவாயிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage