ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

English Meaning:
Jiva Devoid of Thought in Sushupti

Of the Tattvas in Waking State
Four times five are behind left;
The Tattvas four that Antahkaranas form
In Dream State are;
—These you shake off
And into yourself enter;
Then thoughts devoid
The Soul in Sushupti Stands.
Tamil Meaning:
(கனவிலும் பிராணாதி வாயுக்கள் பத்தும் செயற் படுதலால், அந்தக் கரணங்களும் செயற்படவே செய்யும் - அதனால்,) நனவிற்போலக் கனவிலும், மேல் `ஆனைகள் ஐந்து` எனப்பட்ட ஞானேந்திரியப் புலனகள் ஐந்தோடு, கன்மேந்திரியப் புலன்கள் ஐந்தும், இன்னும் பிராணாதி வாயுக்கள் பத்தும் கூடி ஆன்மா அமைதி யுற்றிராதபடி தொல்லையுறவே செய்யும். இந்நிலையில் நிற்கும் ஆன்மா, ஒருமுகப்பட்ட சிந்தனையை விரும்புதலால், புலன்களை யெல்லாம் உதறித்தள்ளி, இருதயத்துட்புகுந்து சுழுத்தியில் நிற்கும்,
Special Remark:
`கனவகத்தே, நனவகத்தே (நிற்கும்) உட்கரணங் களோடு, நால் ஐந்தும் வீடா` எனவும், `அகத்தே நின்று உள்ள, உதறி, நினைவகத்தே உள்புக்கு, இன்று இச் சுழுத்தி நின்றான்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க. இப்பொருள் காணமாட்டாதார் சித்தாந்தத்தில் இல்லாத பொருளை இயைபறவும் உரைப்பர்.
நினைவகம் - இருதயம். இது சுழுத்தித்தானம். இன்று - இப் பொழுது. அதாவது இருதயத்துட்புக்க பொழுது. `இச் சுழுத்தி என்றது, `நனவும், கனவும் போலப் புலன்களில் தொல்லையில்லாது, அமைதியாய் இருக்கும் சுழுத்தி` என்றபடி.
இதனால், `பெத்த காலத்தில் புலன்களின் நீங்கி நிற்கும் நிலை சுழுத்தி நிலை` என்பதும் கூறப்பட்டது. படவே, துரிய துரியா தீதங்களில் அவை யில்லாமை கூறவேண்டாவாயிற்று.