ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனாநன வாதலே

English Meaning:
Limitations of Experiences in the Five States of Awareness

In Turiyatita State
The Consciousness of the Self is not;
In Turiya State
The Consciousness of the Self
Through spoken word comprehened
Still burns;
In the Sushupti State that is Maya bound,
The Desire-potency to speak afterward exists;
In the Waking State and the Dream State
Experiences in ways diverse.
Tamil Meaning:
`கேவலம், சகலம், சுத்தம்` - என்னும், காரண அவத்தை மூன்றனுள் கேவலத்தில் துரியாதீதம், உயிர், `நான்` என் -கின்ற தன்னுணர்வும் இன்றி, ஆணவத்தில் அழுந்தி அதுவேயாய்க் கிடந்த நிலை `யான்` என்னும் உணர்வு முகிழ்க்கின்ற கேவலத்தில் துரியம், மேற் குறித்த நிலையில் இறைவன் அவ்வுயிருக்கு மூலகன் மத்தைக் கூட்டு வித்த நிலை. கேவலத்தில் சுழுத்தி, மூலகன்மத்தோடு காரண சரீரமாகிய மாயா தத்துவத்தைக் கூட்டிய நிலை. இவைகளில் ஆன்மாவிற்கு வினையை ஈட்டுதல் நுகர்தல்கள் இல்லை, கேவலத்தில் சொப்பனம் கால நியதிகளைக் காட்டுவித்த நிலை. சாக்கிரம் கலை வித்தை அகாரகங் களைக் கூட்டிய நிலை. இந்தச் சொப்பன சாக்கிரங்களில் தான் உயிர் வினைகளை ஈட்டுதலும் நுகர்தலும் நிகழும்.
Special Remark:
இவற்றுள் முதல் மூன்றினையும் முறையே `அநாதி கேவலம், விஞ்ஞான கேவலம், பிரளயகேவலம்` - என்பர். `காதல்` என்றது மயக்கத்தை. அஃது ஆகுபெயராய் மாயையைக் குறித்தது.
இதனால், மும்மலங்களைக் கூறிய இயைபு பற்றி, அவற் -றோடு தொடரும் கேவல ஐந்தவத்தையின் இயல்புகள் கூறப்பட்டன.