ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
சூதறி வார்உச்சி சூடிநின் றானே.

English Meaning:
The Dawn of Light Within in Yoga

The birds (Malas) shrilled
Unaware of the shimmering dawn;
Bewildered were they,
Their mother (Sakti) unrecognising;
Beyond Vedas stood He my Lord;
They who knew the Mystic Way (of Yoga)
Reached to Him inside their very head.
Tamil Meaning:
விடியல் வாராத பொழுதும் வந்ததாகக் கருதி நள்ளிரவிலே ஆரவாரித்த சில பறவைகளைப் போன்ற உயிர்கள், திருவருள் தம்மை நோக்குதல் இல்லாத நிலையிலே நின்று, பொய்யை `மெய்` எனக் கொண்டு மயங்குகின்றன. ஆதனால், எங்கள் இறைவனாகிய சிவனும் செம்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்தும் அறியாதவன் போல இருக்கின்றான். இச் சூழ்ச்சியை அறிந்த பெரியோர்கள், நீராதார யோகத்தாலும், சுத்த துரியத்தாலும் அவனது அருளில் தோய்ந்திருப்பர்.
Special Remark:
நள்ளிரவில் ஆரவாரிக்கின்ற பறவை போல்வதாவது, சிவனையுணரும் பக்குவம் வாராத முன்பே வரப் பெற்ற வரைப்போல ஞான அனுபவங்களைக் கூறுதல். மாது, அருட்சத்தி, அது நோக்கா மையாவது ஆன்மாவிற் பதிய எண்ணாமை. எண்ணாத வகையில் நிற்றலாவது, பாசப் பற்றிலே கிடத்தல். வேது - வேதித்தல்; இரசவாதம் செய்தல், இங்குச் சீவனைச் சிவமாக்குதலாம். `வண்ணம் - வண்ணத் -தனாய்` என்க.
இதனால், `மலபரிபாகமும், சத்தி நிபாதமும் இல்லாதார் நூலறிவு பேசினாலும், யோகாவத்தையிற்றானும் செல்லாது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளிலே கிடத்தல் கூறப்பட்டது.