
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம்
தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொலி மூலத்த னாமே.
English Meaning:
Further Evolution to Primal LightHe who thus Isa Became
Reaching Turiyatita State,
As Pure Jnana comprehends worlds all;
Then He further attains the Five Forms,
Sadasiva, Mahesvara, Rudra, Hari and Brahma;
Having experienced those stages,
Jiva becomes Siva;
Then, further attaining Mauna (Divine Silentless) State,
He merges in the Primal Light.
Tamil Meaning:
பராவத்தை உண்மைச் சுத்தாவத்தையே யாயினும் துரியாதீதம், துரியம் ஒழிந்த மற்றை மூன்றாகிய சிவன் முத்தி, அதிகார முத்தி, போகமுத்திகளில் ஆன்மாஉலகபோகத்தை நுகரும். ஏனெனில், சுழுத்தி சொப்பனங்களில், தோற்ற முறையில் சாதாக்கியம் முதல் ஐந்து தத்துவ உடம்புகள் இருத்தலாலும் சாக்கிரத்தில் மாயா உடம்பு இருத்தலாலும் அவ்வாறு அதுகாறும் போகத்தை நுகர்ந்த ஆன்மா, இலயமுத்தியல் சத்திதத்துவத்தைக் கடந்து, சிவதத்துவத்தில் தடத்த சிவமாய்ப் புறப் பொருளுணர்ச்சி யின்றிச் சிவ உணர்வே மிக்கிருக்கும். அந்நிலையில் சூக்கும வாக்கை அது பற்றி நிற்கும். ஆகவே, பர துரியாதீதத்தை அடைந்த பொழுதுதான் ஆன்மாச் சிவஞானம் ஒன்றையன்றிப் பிறிதொரு பற்றும் இல்லாமல், சிவத்தை முழுமையாக அனுபவிக்கும்.Special Remark:
ஈசன் அதீதம் - பராவத்தையில் நிகழும் அதீதம்` இம் முதலடியை இறுதியிற் கூட்டியுரைக்க. ஆன்மா `தான் உலகு உண்டு` என்பதை, `போய்` என்பதன் பின்னர்க் கூட்டுக. தான் `சாதாசிவமாதி` என்பதில் `ஆதி` என்பது தொகுக்கப்ட்டது. மாய் சத்தி - தோற்றமும் ஒடுக்கமும் உடைத்தாய் நிலையில்லாத சத்தி. இங்குச் சுத்த மாயா சத்தி. `மாசத்தி` என்பதே பாடம் எனினும் `மாமாயையின் சத்தி` என்றே கொள்ளப்படும். மேனிகள் ஐந்து அணு சதாசிவர், மந்திர மகேசுரர், வித்தியேசுர், சுத்த வித்தையில் நிற்கும் மால், அயன். `ஐந்திலும் போய்` என உருபு விரிக்க. போதல் - புகுல். `அடைந்து` என்பதன் பின் `அவ்விடத்து` என்பது வருவிக்க. ஒலிமூலம் - மூலஒலி; நாதம். அதுவே சூக்குமைவாக்காம்.இதனால், பராவத்தைகளில் அதீதம், அஃதொழிந்த பிற இவற்றின் உயர்வு, தாழ்வுகள் தெரித்துக் காட்டப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage