ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
    பின்ன முறநின்ற பேத சகலனும்
    மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
    துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.
  • 10. அனாதி பசுவியாத் தியாகும் இவனை
    அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
    அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு)
    அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.
  • 11. அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
    தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
    தின்பால் துரியத் திடையே அறிவுறத்
    தன்பால் தனையறி தத்துவந் தானே.
  • 12. ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
    மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
    துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
    ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.
  • 13. ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
    மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
    கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
    எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.
  • 14. ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
    பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
    காணும் உருவினர் காணாமை காண்பவே
    பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.
  • 15. ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப்
    பேணிய கன்மம் பிரளயா கலருக்கே
    ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே
    காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.
  • 16. கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர்
    கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால்
    ஆவயின் கேவலத் தச்சக லத்தையும்
    மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.
  • 17. மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
    மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
    மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
    ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.
  • 18. மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
    அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
    மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
    அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
  • 19. சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
    சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம்
    மத்த இருள்சிவ னானகதி ராலே
    தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.
  • 2. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
    தானே தனக்கு மறுமையும் இம்மையும்
    தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
    தானே தனக்குத் தலைவனும் ஆமே.
  • 20. தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
    பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
    சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
    தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.
  • 21. அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான்
    குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி
    செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன்
    கிறியன் மலவியாபி கேவலத் தானே.
  • 22. விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
    சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி
    விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
    வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.
  • 23. கேவல மாதியில் பேதம் கிளக் குறின்
    கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள்
    ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா
    ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.
  • 24. கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம்
    கேவலத் திற்சக லங்கள் வயந்தவம்
    கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்
    ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.
  • 25. சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம்
    சகல சகலமே சாக்கிரா தீதம்
    சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
    சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.
  • 26. சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல்
    சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம்
    சுத்த சகலம் துரிய விலாசமாம்
    சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.
  • 27. சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு
    சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே
    சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே
    ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.
  • 28. சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம்
    சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
    ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை
    நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.
  • 29. பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
    சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
    `அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
    சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.
  • 3. ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து)
    ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக்
    காமிய மாயேய மும்கல வாநிற்பத்
    தாமுறு பாசம் சகலத்த தாமே.
  • 30. எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
    எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
    `எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
    எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.
  • 31. ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
    ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
    ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
    ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே
  • 32. கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
    அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
    உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
    அரிய கனா தூலம் அந்நன வாமே.
  • 33. ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம்
    பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
    பேணுங் கனவுமா யேயம் திரோதாயி
    காணும் நனவில் மலக்கலப் பாகுமே.
  • 34. அரன்முத லாக அறிவோர் அதீதத்தர்
    அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக்
    கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர்
    அருளும் மறைவார் சகலத்துற் றாரே.
  • 35. உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று
    மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி
    வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக்
    கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.
  • 36. இருவினை ஒத்திட இன்னருட் சக்தி
    மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக்
    குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
    பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
  • 37. ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
    டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
    பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
    ஈறார் பரசிவம் ஆதேய மாமே.
  • 38. தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
    தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
    உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
    பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.
  • 39. சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்
    ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த
    நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம்
    வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
  • 4. சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
    புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
    நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள்
    இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.
  • 40. அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
    அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
    அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
    அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.
  • 41. அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம்
    உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம்
    பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து)
    உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.
  • 42. மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
    ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
    ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
    ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.
  • 5. தாவிய மாயையில் தங்கும் பிரளயர்
    மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர்
    ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர்
    ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.
  • 6. ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
    ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
    ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
    ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.
  • 7. ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர்
    போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு)
    ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர்
    தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.
  • 8. ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
    தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
    சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
    வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.
  • 9. பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
    எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
    மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
    எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.