ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை
நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.

English Meaning:
In Jagratatita State is Upasanta

In the state of Jagratatita
Anava is rooted entire;
Jagratatita, Para-Avasta (Siva) state is not;
But sure it confers Upasantha
That by Para caused;
Will Jiva, thereafter,
Ever look at Malas and Gunas?
Tamil Meaning:
(`சாக்கிராதீதம்`-என்ற பெயர் சொல்லப்படுவன இரண்டு. ஒன்று ஆணவம் நீங்கிய சாக்கிராதீதம்; மற்றொன்று, ஆணவம் நீங்காத சாக்கிராதீதம்.) அவற்றுள் ஆணவம் நீங்கிய சாக்கிராதீதமும் பராவத்தையில் உயிர் சென்று தங்காதபடி பரோ பாதியை உண்டாக்கும் ஆகையால், பராவத்தையாகிய உபாதியற்ற நிலையை நோக்கியே செல். ஏனெனில், `உபாதியாயினும் பரோபாதி தானே` என நினைப்பனவெல்லாம் பாசத்தோடு கூடியிருக்க நினைப்பனவேயாகும்.
Special Remark:
`ஆணவம் அறும் சாக்கிராதீதம்` என எடுத்துக் கொண்டு உரைக்க. தான், அசை, பாடத்தை இவ்வாறே ஓதலும் ஆம். ஆணவம் அறாத சாக்கிராதீதம், மத்தியாலவத்தையில் நிகழும் அதீதம். ஆணவம் அற்ற சாக்கிராதீதம், நின்மலாவத்தையில் நிகழும் அதீதம். இவை யிரண்டும் சகலத்தில் சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆகும். இவற்றுள் நின்மலாவத்தைகள் தமக்குக் கீழ் உள்ளவற்றை நோக்கச் சுத்தமே யாயினும், உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் செல்லு தற்குத் தடை யாதலும் உடையன. அவை அன்னவாதல் பரோபாதியை உடைமை யினாலாம். அது பற்றியே, `பராவத்தை தங்காது பரோ பாதியை ஆக்கும்` என்றார். உபாதி - தடை. பரோபாதி - மேல் நிலைத் தடை. அஃது உலகம் எங்கும் சிவம் நிறைந்து நிற்றலை நினைந்து எப்பொருளிலும் சிவத்தையே கண்டிருத்தல். இது சிறப்புடையதே யாயினும், சிவத்தையே நேராகக் கண்டிருத்தலை நோக்கச் சிறப்பில தாதலை உணர்க.
உபசாந்தம் - உபாதியற்றநிலை. அது பராவத்தையேயாதல் அறிக. `உபசனுந்தத்தையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. `குணம் நோக்குதல் மலம் நோக்குதலாகும்` - என மொழி மாற்றி, `அதன் குணம்` என உரைக்க. எல்லாப் பொருளிலும் சிவத் தையே காணிணும் அஃது உலகத்தை இடையிட்டுக் காண்பதேயாத -லின் அக்காட்சியின் சிறப்பை மட்டும் நோக்குதல், `மலம் நோக்குதல் ஆகும்` என்றார். சிவத்தை `உபாதி` என உரைத்தாரும்` உளர்.
இதனால், மேற்கூறிய அவத்தை பேதங்களில் `சுத்தத்திற் சுத்தத்தையே குறிக்கொண்டு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.