ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.

English Meaning:
Pralayakalas — 108 Rudras

The Pralayakalas in Maya (Suddha) reside;
Yet that Maya affects them not;
They stand with Anava;
With Mamaya`s (Asuddha) Kamya desires
That Sakalas possess;
They verily are the Rudras One Hundred and Eight.
Tamil Meaning:
வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் மட்டுமே செயற்பட்டு நிற்கும் நிலையில் பிரளயாகலர்பால் அந்த மாயா தத்துவ மும் மெத்தெனவே செயற்படுதலால் ஆணவம் மேற்பட்டு நிற்கும். (அஃதே அவர்க்குக் கேவல நிலையாகும்.) இனி, அவர்கட் குரிய சகலா வத்தைக்கண் சுத்த தத்துவங்கள் செயற்படுதலானே கன்ம மலங் காரியப் படுவதாகும். இந்நிலையில் நிற்பவர்கள், மேல், ``தாவிய மாயை``- என்னும் மந்திரத்தில் (2199) குறிப்பிடப்பட்ட நூற்றெட்டுருத்திரராவர்.
Special Remark:
`பிரளயாகலர்பால்` - என ஏழாவது விரிக்க. `ஆணவம்` என்பதின்பின் `மிகும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. மாயம் - நிலையாமை. பிரளயாகலர்க்குரிய சகல நிலையாவது, வித்தியாதத்துவங்கள் செயற்பட அவற்றால் அறிவு விளங்கப்பெறும் நிலை. காமியம் - கான்மியம். அஃதாவது காரிய கன்மம். மாமாயை என்றது, அதன் காரியமாகிய சுத்த தத்துவங்களைக் குறித்த ஆகு பெயர். `மாமாயையால் காமியம்` என உருபு விரித்து, மாறிக்கூட்டுக. `சுத்த தத்துவங்கள் செயற்பட்டுநிற்கும்` என்றதனால், அவற்றால் வித்தியா தத்துவங்கள் செயற்படுதல் தானே பெறப்பட்டது.
`காமியம்` என்பதன்பின்னும், `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. மன்னுதல் - நிற்றல். இது `மன்` என முதனிலையளவாய் நின்று, மன்னுவாரைக் குறித்தது.
இதனால், இருமலம் உடையார்க்குக் கேவல சகலங்கள் நிகழுமாறு கூறப்பட்டது.