ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

English Meaning:
Knowledge of Self in Turiya Leads to Suddha State

The Suddha State is the ultimate;
The Jiva that passes through Kevala
When it reaches Turiya
Receives knowledge of Tatpara,
—Who beyond States, Kevala and Suddha, exists—
Thus realizing the Self within.
Tamil Meaning:
எல்லாவற்றினும் மேலாய், நிறைவாய் உள்ள உண்மைச் சுத்த துரியாதீதமே, `சுத்தாவத்தை` என்றற்குப் பெரிதும் ஏற்புடையது. அஃது `அருட்கேவலம்` எனப்படும் தத்துவ சுத்திக்குப் பின் வாய்ப்பதாகும். அதனை அவ்வாற்றால் சிவனால் தரப்பட்டவர் தனித்த ஒரு சுத்தமாகிய அந்த அதீத நிலையில் யாதொரு பற்றும் இல்லாத சிவமேயாய் இருப்பர். (இதில், `யான், எனது` என்னும் உணர்வு இல்லையாம்.) இனி அதற்குக் கீழ்நிலையில் உள்ள துரிய நிலையில் ஆன்ம அறிவு சிறிதே நிகழ்தலால், ஆன்மாச் சிவனை அறியும் முகத்தால் தன்னை அறிபவனாக உணரும் நிலை உள்ளதாம்.
Special Remark:
`அந்தரம்` என்பது, `ஆகாயம்` என்னும் பொருட்டாய், மிக மேலான நிலையைக் குறித்தது. அஃது உண்மைச் சுத்த துரியா தீதமாம். `அதற்கு வழி` என்றதனால், `கேவலம்` என்றது, அருட் கேவலம் ஆயிற்று. தந்தோர் - தரப்பட்டோர். `அதனைத் தந்தோர்` என்க. `சுத்த கேவலம்` என்றதில், `கேவலம் கலப்பற்றது` எனப் பொருள் தந்தது. ``தற்பரத்தின்பால்`` என்பதன் பின் `உளர்` என்பது எஞ்சி நின்றது. `இடை` - ஏழனுருபு. `அறிவுற` என்னும் செயவெ னெச்சம் காரணப் பொருளில் வந்தது. தான், அசை. ஏகாரம், தேற்றம். இதன்பின்னும் `உள்ளது` என்பது எஞ்சி நின்றது. `தத்துவம் ஆமே` - எனப்பாடம் ஓதலும் ஆம்.
இதனால், சுத்தத்தில் சுத்தமாய் உள்ளவை சுத்த துரியமும் துரியாதீதமும் ஆதல் சொல்லப்பட்டது.