ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.

English Meaning:
Beyond Turiyatita is Void

In the void beyond the Atita State,
Sakti (Water) and Siva (Fire) will appear,
Water and Fire do not together in space appear,
How then does Water and Fire in Void appear?
That way are the mingled
Sakti (Water) and Siva (Fire), there.
Tamil Meaning:
`இன்பம், துன்பம்` என்னும் இரண்டும் உலக உணர்வே நிகழும் சகலாவத்தையில் நிலையின்றி, மாறி மாறித் தோன்றும். அகலாவத்தையாகிய சுத்தாவத்தையில் அவை தோன்றவேமாட்டா. `சகலாவத்தையில் அவை தோன்றுதல் ஏன்` எனில், இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் சகலாவத்தை.
Special Remark:
`பிரபஞ்சம்` என்னும் வடசொல்லுக்கு, `விரிவுடையது` என்பது பொருளாகலின் அதனை `அகலம்` எனத் தமிழாக்கி, முதலிலும், கடைசியிலும் சொற்பின்வரு நிலையணி தோன்றக் கூறினார். அஃது ஆகுபெயராய்ப் பிரபஞ்சத்தை உணர்ந்து நிற்கும் சகலாவத்தையைக் குறித்தது. இடையில் உள்ள `அகலம்`, `சகலம்` என்னும் வடசொற்கு எதிராய வடசொல். `சுத்தம்` என்னாது `அகலம்` என்றது அவ்வணி தோன்றுதற் பொருட்டேயாம். `அப்பும் அனலும்` என்றவை மறைபொருட் சொற்கள். அவையும் சொற்சுவை தோன்ற வந்தனவேயாம். அப்பு - நீர். அனல் - தீ. இவை அவற்றின் வெளிப் படைப் பொருள். அச்சொற்கள் நான்கடியிலும் வந்தது, சொற்பொருட் பின்வருநிலையணி. அவ் ஆறு - அந்த வழி. நிலையை `வழி` என்றார்.
இதனால், சகலாவத்தை பந்தமும், சுத்தாவத்தை வீடும் ஆதல் கூறப்பட்டது.