ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.

English Meaning:
Four Divisions of Vijnanakalas

When you think of it,
Of these Souls in gradation three,
Vijnanakalas have divisions four,
They are shrouded in Kevala (Asuddha) Maya;
Inclined are they to be gripped by Desire,
Yet, of themselves they leave all;
When the Lord His Grace bestows;
And together the Malas sunders.
Tamil Meaning:
ஆன்மாத் தன் அறிவை யிழந்து நிற்பதாகிய கேவல நிலையுள் மூன்றுவகை உண்டு. அவை நாலாகவும் வகுத்துக் கூறப்படும். `அவை யாவை` - என ஆராயின், ஆணவகேவலம், ஆணவத்தை நீக்குதற்குச் சிவன் விரும்பும் விருப்பக் கேவலம், தத்துவ சுத்திக்குப்பின் ஆன்ம தரிசனத் தொடக்கத்தில் உளதாகும் திகைப்புக் கேவலம்` என்பன. (இவை முறையே ஆன்மா அநாதியில் ஆணவத்தில் மூழ்கியிருந்த நிலையும், பின்பு இறைவன் ஆன்மாவை அந்நிலையினின்றும் விடுவிக்க மாயையைக் கூட்ட முனையும் நிலையும், பின்பு மாயா காரியங்களாகிய கருவி கரணங்களினின்றும் நீங்கிய நிலையுமாகும். இவை முறையே மருட்கேவலம், சகல கேவலம், அருட் கேவலம் - எனப் பெயர் பெறும். இறைவன் மாயையைக் கூட்டமுனைவது சூக்கும ஐந்தொழிலாகும். இந்நிலை சருவ சங்காரத்திற்குப் பின் மீளப் படைத்தற்கு முன்னேயும் உளதாகும். இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்து அதிகரணத்தின் சிற்றுரையால் உணர்க. அருட் கேவலம் துகளறு போதத்திலும் சொல்லப்பட்டது.
இனிச் சகல கேவலத்தை, விஞ்ஞான கேவலம், பிரளய கேவலம் - என இரண்டாக்கி, `கேவலம் நால் வகைத்து` என்றலும் உண்டு (இதனை நாயனார் உய்த்துணர வைத்தார். சகல கேவலத் -தையும் வேறாக எண்ணி, `கேவலம் ஐவகைத்து` என்றலும் உண்டு. அதனை நாயனார் குறித்திலர். மாயை, கன்மம் - இரண்டனோடும் கூடாது, அவை கூட்டப்படுதற்கு ஆவன செய்யப்படும் நிலை விஞ்ஞான கேவலம் - எனவும், கன்மம் கூட்டப்பட்டு, மாயை கூட்டப் படாத நிலை பிரளய கேவலம் - எனவும் உணர்க.)
இவ்வாறான பல வகை அவத்தைகளை வைத்துச் சிவன் ஆன்மாக்களின் பாசங்களைப் போக்குகின்றான்.
Special Remark:
`ஆகவே அஃது அருட் செயலேயன்றி, வன்கண்மைச் செயலன்று` என்பது குறிப்பெச்சம். `சேர் இச்ை\\\\u2970?` `சேர்க்கும் இச்ை\\\\u2970?` எனப் பிறவினை வினைத்தொகை. சார் இயல் - சார்பு தன்மை. இயல் உடையவற்றை `இயல்` என்றார். அவை மாயா காரியங்கள். `தாம், ஏ` அசைகள். தணப்பு - நீக்கம். இஃது ஆகுபெயராய், அது நிகழும் நிலையைக் குறித்தது. வாரி வைத்தல் - அள்ளி வைத்தல்; `மிகுதியாக வைத்து` என்றவாறு.
இதனால், காரண அவத்தைகள் மூன்றனுள் ஒன்றன் உட்பகுதிகள் கூறப்பட்டன.