ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
    சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
    ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
    தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 
  • 10. கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
    நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
    வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
    சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே. 
  • 11. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
    செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
    இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
    நன்பால் ஒருவனை நாடுகின் றேனே. 
  • 12. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
    இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
    குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
    விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. 
  • 13. ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
    வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
    பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
    சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 
  • 14. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
    அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும்
    புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
    அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே. 
  • 15. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
    கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
    ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
    மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே. 
  • 16. பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
    பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
    அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
    அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 
  • 17. இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
    அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
    நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
    உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. 
  • 18. இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
    துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
    ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
    வெந்தது சூளை விளைந்தது தானே. 
  • 19. அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
    பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
    செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
    தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே. 
  • 2. அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
    செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
    பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
    பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 
  • 20. உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
    மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
    திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
    கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே. 
  • 21. கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
    மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
    கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
    நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.
  • 22. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
    காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
    நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
    பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 
  • 23. எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
    கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
    ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
    கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 
  • 24. கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
    பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
    எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
    மண்முத லாகவகுத்துவைத் தானே. 
  • 25. அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
    அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
    தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
    வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
  • 26. வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
    தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
    பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
    வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே. 
  • 27. மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
    காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
    பூண்பது மாதா பிதாவழி போலவே
    ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே. 
  • 28. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
    பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
    தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
    பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 
  • 29. பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
    பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
    பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
    பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. 
  • 3. இன்புறு காலத் திருவர்முன்பூறிய
    துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
    பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
    அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. 
  • 30. பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
    பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
    பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
    பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 
  • 31. மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
    மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
    மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
    மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 
  • 32. குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
    குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
    குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
    குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. 
  • 33. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
    கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
    கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
    கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே. 
  • 34. கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
    தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
    பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
    போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 
  • 35. உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
    பருவம தாகவே பாரினில் வந்திடும்
    மருவி வளர்ந்திடு மாயையி னாலே
    அருவம தாவதிங் காரறி வாரே. 
  • 36. இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
    தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
    பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
    கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே! 
  • 37. இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
    துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
    முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
    தொண்புற நாடிநின் றோதலு மாமே  
  • 38. குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
    அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
    இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
    மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
  • 39. முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
    அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
    அதற்கது வாய்இன்ப மாவது போல
    அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. 
  • 4. கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
    புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
    திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
    துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.
  • 40. பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
    உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
    திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
    திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 
  • 5. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
    ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
    பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
    ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. 
  • 6. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
    தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
    மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
    கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே. 
  • 7. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
    மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
    நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
    பாகன் விடானெனிற் பன்றியு மாமே.
  • 8. ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
    மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
    நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
    பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே. 
  • 9. ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
    பாயுங் கருவும் உருவா மெனப்பல
    காயங் கலந்தது காணப் பதிந்தபின்
    மாயங் கலந்த மனோலய மானதே.