ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 

English Meaning:
The five senses with their foolish ways
Are in this body born;
And there they subside;
So does Jiva
That permeates macrocosm
Surely subside in Nada.
Tamil Meaning:
உடம்பிலே பொருந்தியுள்ள மயக்கத்தை உடைய ஐம்பொறிகளும் அவ்வுடம்பையே என்றும் பற்றுக்கோடாகக் கொள்கின்றன. அதுபோலவே முட்டை வடிவாகத் தோன்றும் கருவைப் பற்றியுள்ள உயிரும் அக்கருவையே பற்றுக்கோடாகக் கொண்டு தாயின் கருப்பைக்குள் இருக்கும்.
Special Remark:
இது, கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாத பிண்டமாகிய கருவில் உயிர் செயலற்றிருத்தல் எவ்வாறு என்பார்க்கு, `செயலின்றி, அறிதல் மாத்திரையாய் நிற்கும்` என ஐயம் அகற்றியவாறு. ``பிண்டம்`` என்றது உடம்பை. `மரித்தது` என்பது பாடம் ஆகாமை அறிக. விந்துவை அடக்கிக் கொள்ளுதலால் கருப்பை ``நாதம்`` எனப்பட்டது. `பிறவற்றை நோக்க அறிவாய் நிற்கின்ற ஐம்பொறிகள், அவ்வறிவுத் தன்மை யில்லாத உடம்பிலே நிற்றல் போல, சடம் போல்வதாகிய பிண்டத்தில் சித்தாகிய உயிர் நிற்கும்` என்பதாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.