
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
English Meaning:
None the Grace but Hara`sNone Hara`s but the Grace,
And so as He bestows life,
He bestows, too,
The Loving care of foster mother twain,
Tamil Meaning:
அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்றபொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.Special Remark:
அருளும், சிவனும் ஒன்றாதலைக் காட்டியது உயிரை வளர்த்தற்குக் காரணமும், வளர்க்கின்ற தாயும் அவனே ஆகின்றான் என்பதும் தோன்றுதற்கு. `அருட்சத்தியே உயிருக்கு நற்றாய்` என்னும் கருத்தால், திரோதான சத்தியையும் செவிலியாகக் கூறினார்.இதனால், கருவைப் பிறப்பித்த பின்னர் வளர்ப்பவனும் சிவபெருமானேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage