ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே. 

English Meaning:
If in Male and Female breath runs
In measure equable,
The infant born will exceeding handsome be;
When in both breath rhythm falters,
No Conception will there be.
Tamil Meaning:
கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.
Special Remark:
``ஒத்து`` என்றது, இடம், அளவு இரண்டற்கும் ஒப்பக் கூறியது. அதனானே, `அளவு ஒவ்வாதொழியின், அழகின்றி யிருக்கும்` என்பது பெறப்படும். `மாறிடில்` என்னாது, ``குழறிடில்`` என்றார், `பன்முறை மாறி நிகழின்` என்பது அறிவித்தற்கு.
குழவி ஆணும், பெண்ணும் ஆதற்குத் தந்தையது மூச்சுக் காற்றுத் துணைக்காரணம் என்பது மேற்கூறி, இதனால், `அதனோடு தாயது மூச்சுக்காற்று ஒத்தல் அழகிற்குக் காரணம்` என்பதும், தாயது மூச்சு ஒவ்வாமை கரு நிலைபெறாதொழிதற்குக் காரணம் என்பதும் கூறினார்.
``கொண்டதும்`` என்ற உம்மை, சிறப்பு. `கோல்வளை யாட்கு` என்பதனை, `கோல்வளையாள் கண்` எனத் திரித்து, `கோல்வளை யாள்கண் கொண்டதும் இல்லையாம்` என மாற்றுக. கொண்டது - கொண்ட கரு.