ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

English Meaning:
Further Signification of Dance-Form in Relation to Five Letter Mantra

The hand that holds the drum, (Si)
The hand that sways, (Va)
The hand that offers Refuge, (Ya)
The hand that holds the blazing Fire, (Na)
The lotus-foot, firm, on Anava Mala planted, (Ma)
—Thus of the Divine Dance Form
Si Va Ya Na Ma denotes.
Tamil Meaning:
கூத்தப் பிரான் திருவுருவத்தில் உடுக்கை வீச்சு, அமைப்பு, நெருப்பு இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே `சி, வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக.
Special Remark:
``சேர்க்கும் துடிசிகரம்; சிக்கெனவா வீசுகரம்;
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம்; அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்``*
என்னும் உண்மை விளக்க வெண்பாவினைக் காண்க. திருவைந் தெழுத்து இவ்வாறு சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் ஆகும் என்பதனை நினைவூட்டுதற் பொருட்டு, ``உரு இல் சிவாயநம`` என்றார். உரு இன்மை அருவம்; சூக்குமம். இனி நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை அந்நூல்,
``ஆடும் படிகேள்; நல் அம்பலத்தான்; ஐயனே,
நாடும் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம்; வளர்தோள் சிகரம்;
பகருமுகம் வா;முடிய; பார்``9
என்பதனால் விளக்கிற்று. அதனை நாயனார் இங்குக் குறித்திலர். அஃது உலகப் பயனையே விளைத்தலின். கரு, ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. உடம்பு, முயலகனது. அன்றி, அம்மந்திரம் கிடைத்திலது என்றலும் ஆம். `கருவின்கண்` என `மேல்` என்னும் பொருட்டாகிய ஏழாவது விரிக்க.
இதனால், முன் மந்திரத்தில் சிலேடை வகையான் குறித்த சூக் கும பஞ்சாக்கர முறை வெளிப்படையாக இனிது விளங்கக் கூறப்பட்டது.