ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

English Meaning:
Jnana Dance

The perplexities of the Five Gods
Rudra and the rest to end,
The Jiva bonds standing afar,
In prayer to depart
The Holy Para by Himself dances everywhere;
Holy indeed is the Jnana Dance
That Sivananda Bliss fills.
Tamil Meaning:
சரியை முதலிய இறப்பில் தவங்களை நிரம்பச் செய்த உயிரைப் பாசங்கள் அப்பொழுதே விட்டு நீங்குதலால், அவ்வுயிர் சிவன் முதலிய ஐவரால் உண்டாகும் அலமரல் நீங்கும்படி, தவத்தின் வடிவாய் விளங்கும் சிவன் எங்கும் தானாய்த் திருக்கூத் தியற்றுவன். அக்கூத்துத் தவத்தால் விளைந்த ஞானத்தின் பயனாக அதற்கு உரியோர் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.
Special Remark:
மூன்றாம் அடியை முதலில் வைத்து `பசுவினின்றும்` என உருபு விரிக்க தனித்து. தனித்தலால், எங்கும் தான் ஆக-தனது வியாபக நிலை தோன்றும்படி. அஃதாவது, `எங்கும் சிவமாய்த் தோன்றும்படி` என்பதாம். `அது ஞானக் கூத்து` எனச் சுட்டு வருவித்து தவமாம் சிவானந்தத்தோர்க்கு` என உருபு விரித்து முடிக்க.
சிவமாதி ஐவர், சிவ தத்துவம் முதலிய சுத்த தத்துவம் ஐந்திலும் நிற்கும் முதல்வர்கள். இவர்கள் பந்தத்தில் உள்ள உயிர்களை அவற்றி னின்றும் நீங்குதற்கு ஆவன செய்வாராயினும், அச்செயல் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல் அப்பொழுது துன்பமாய் தோன்றுதல்போல அலமரலை விளைக்குமாகலின், அந்நோய் நீக்கத்தை, அவரால் விளையும் திண்டாட்டம் நீங்குதலாகக் கூறினார். `திண்டாட்டம்` என்னும் நாட்டுப்புற வழக்கு, 2736 ஆம் மந்திரத்திலும் வந்தது.
இதனால், திருக்கூத்து வகைகளுள் ஞானக்கூத்தின் சிறப்புக் கூறப்பட்டது.