ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

English Meaning:
Dance in Space

The Space is His Body;
The Muyalaka (Demon) is the Darkness in that space
The Directions eight are His spreading Hands,
The loving eyes three
Are tne lights three (Sun, Moon and Fire);
Thus He dances
In the space arena,
That is Body Cosmic.
Tamil Meaning:
ஆகாயம் ஒன்றேயாய் எங்கும் வியாபித்துள்ளது. ஆயினும் செயற்கையால் வரையறுக்கப்பட்டு, `மடாகாயம், கோயில் ஆகாயம், மன்ற ஆகாயம்` முதலாகப் பலவாறு வழங்கப்படுகின்றன. அவையெல்லாம் சிறு ஆகாயங்களாக, இயற்கை ஆகாயம் `மகாகாயம்` எனப்படும். சிறு ஆகாயங்களில் பல உருவங்களில் நடனம் செய்கின்ற சிவன் மகாகாயத்தையே அம்பலமாக ஒன்றேயான விசுவ ரூபத்தை உடையவனாயும் நடனம் புரிகின்றான். அந்நிலையில் அவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; போர்வை போலச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளே எட்டுக் கைகள்; சூரியன், சந்தரன், அக்கினி என்னும் முச்சுடர்களே விரும்பத்தக்க மூன்று கண்கள் என இவ்வாறு அமையும்.
Special Remark:
`ஆங்காரம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, ``ஆங்கார்`` என நின்றது. அஃது அதற்குக் காரணம் ஆணவ மலத்தைக் குறித்தது. `மோகமார்` என்பதும், அவ்வாறு, `மோகார்` என நின்றது. மோகம் - விருப்பம். ``மாகாயம்`` என்பதில் காயம் - ஆகாயம்.
இதனால் அகண்டமாய் உள்ள விசுவரூப நடன அற்புதம் கூறப்பட்டது.