ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

English Meaning:
He Danced for Rishis Patanjali and Vyaghrapada

In the splendorous Temple (of Chidambaram)
He danced,
For the two Rishis1 to witness
He danced, Form, Formless and as Cosmic Form,
Within the Divine Grace of Sakti
He danced,
He the Siddha, the Ananda;
As Form of Grace
He stood and danced.
Tamil Meaning:
உண்மையில் அருட்சத்திக்கு உள்ளே சென்று அடையப்படுபவனாய் ஆனந்தத்தைப் பொழியும் சிவன் இவ்வுலகில் `பதஞ்சலி, வியாக்கிரபாதர்` என்னும் முனிவர் இருவர் எப்பொழுதும் கண்டு களிக்கும்படி, உருவம் `அருவம், உருஅருவம்` என்னும் மூன்று திருமேனிகளில், அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.
Special Remark:
``இருவரும் காண்`` என்றதனால், இங்குக் கூறிய அம்பல தில்லை அம்பலம் ஆயிற்று. அங்கு உருவம், கூத்துக் கோலம். அருவம், ஆகாசத்தைச் சுட்டும் இரகசியம். உருஅருவம், `திருச்சிற்றம்பலம் உடையார்` என்னும் இலிங்கத் திருமேனி. சித்தன் - அடையப்படுபவன். மூன்றாம் அடியை முதலில் வைத்து உரைக்க.
இதனால் தில்லைம்பலக் கூத்தின் அற்புதம் கூறப்பட்டது.