
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.
English Meaning:
Night And Day Yearn For HimUnceasing, I prattle daily Nandi`s name.
By day praise Him in thought and by night as well,
Daily I yearn for my Master, the Light-hued,
The Lord of the uncreated Radiant Flame.
Tamil Meaning:
இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.Special Remark:
விடாது சொல்லுதலை, `பிதற்றுதல்` என்றார். `நந்தி பேர் தன்னை` என மாற்றுக. நெஞ்சத்து இயற்றுதல், நினைத்தல். `உஞற்றுவன்` என்பது, `உயற்றுவன்` என நின்றது. `முயற்றுவன்` எனவும் பாடம் ஓதுவர். `இயல்பாகத் திகழ்கின்ற சோதி` என்க. இறைவன், ஆகுபெயர். ``ஆம்`` என்றதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது.பதினெட்டுத் திருமந்திரங்களால் தம் வரலாறும், நூல் வரலாறும் கூறிய நாயனார், நான்கு திருமந்திரங்களால் அவையடக்கம் கூறுகின்றார். நாயனார் அவையடக்கம் கூறியது, இறைவனது பெருமையை மாணாக்கர் உணர்தற்பொருட்டு என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage