ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

English Meaning:
Seven Disciples
Through instruction imparting
Malangan, Indiran, Soman and Brahman,
Rudran, Kalangi and Kancha malayan,
Come as my disciples in succession.
Tamil Meaning:
எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.
Special Remark:
மந்திரம் எனப்பின்னர்க் கூறப்படும் பெயரை இங்கு எதிரது போற்றிக் கூறினார். இந்திரன் முதலியோர் கடவுளரல்லர், அப்பெயர்பெற்ற மாணாக்கர் என்க. இவர்களை ஓரோரிடத்தில் நாயனார் பின்னர்க் குறித்தல் காண்க. இவர் என்வழியாம் என வேறு தொடராக்குக. இங்ஙனமாகவே, இவர் எழுவரும் திருமூலர்தம் நேர் மாணாக்கராய்ப் பின்பு அவரது மரபினை வேறுவேறிடத்தில் இருந்து வளர்த்தனர் என்பது பெறப்படும். அண்மையில் வாழ்ந்த தாயுமான அடிகள் தம் ஆசிரியராகிய மௌன குருவை, மூலன் மரபில்வரு மௌன குருவே என விளித்தமை காணப்படுகின்றது.