
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.
English Meaning:
Countless Years In Mortal BodyIn this body, for countless millions of years, in the subtle realm where there is neither day nor night, I have sat beneath the unparalleled divine feet of our Guru and Lord, who is adored and praised by thousands of gods, sages, and siddhas.
Tamil Meaning:
இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.Special Remark:
ஆசிரியர் சிவமேயாதல்பற்றி, நந்தி இணையடி சிவனடியேயாதல் அறிக. `இரவு, பகல்` என்பன அறியாமையும், அறிவுமாம். இவை கருவி கரணங்களின் நீக்கத்தாலும், தொடக் கினாலும் வருவன. இவை அற்றஇடம், என்றும் ஒரு பெற்றியாய் விளங்கும் பேரறிவாம். அதனால் அங்குத் துன்பம் என்பதின்றி, இன்பமே உளது என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage