ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

English Meaning:
Countless Years In Mortal Body

In this body, for countless millions of years, in the subtle realm where there is neither day nor night, I have sat beneath the unparalleled divine feet of our Guru and Lord, who is adored and praised by thousands of gods, sages, and siddhas.
Tamil Meaning:
இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.
Special Remark:
ஆசிரியர் சிவமேயாதல்பற்றி, நந்தி இணையடி சிவனடியேயாதல் அறிக. `இரவு, பகல்` என்பன அறியாமையும், அறிவுமாம். இவை கருவி கரணங்களின் நீக்கத்தாலும், தொடக் கினாலும் வருவன. இவை அற்றஇடம், என்றும் ஒரு பெற்றியாய் விளங்கும் பேரறிவாம். அதனால் அங்குத் துன்பம் என்பதின்றி, இன்பமே உளது என்க.