
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
English Meaning:
Eight NathasBy Nandi`s grace I, became Nathan,
By Nandi`s grace I, entered into Moolan,
By Nandi`s grace, what can I perform not?
Nandi guiding, I here below remained.
Tamil Meaning:
நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.Special Remark:
பெற்றோம், நாடினோம் என்பன பாடமாயின் அவற்றை ஒருமைப் பன்மை மயக்கமாகக் கொள்க,Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage